கோஹ்லி அசத்தல் சதம்; கோப்பையை கைபற்றியது இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கோஹ்லியின் அசத்தல் சதம் கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடந்தது.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரின் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷாய் ஹோப்(51), கெய்ல் ஹோப்(46) சகோதரர்கள் நம்பிக்கை தந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் கைபற்றினர்.
பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தவான்(4), ரஹானே(39) ஏமாற்றினர். கேப்டன் கோஹ்லியும், தினேஷ் கார்த்திக்கும் அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதிரடி சதம் விளாசிய கோஹ்லி 111 ரன்களுடனும், தன் பங்குக்கு அரைசதம் விளாசிய கார்த்திக் 50 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைபற்றிய இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கோஹ்லியின் அசத்தல் சதம் கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடந்தது.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரின் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷாய் ஹோப்(51), கெய்ல் ஹோப்(46) சகோதரர்கள் நம்பிக்கை தந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் கைபற்றினர். பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தவான்(4), ரஹானே(39) ஏமாற்றினர். கேப்டன் கோஹ்லியும், தினேஷ் கார்த்திக்கும் அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதிரடி சதம் விளாசிய கோஹ்லி 111 ரன்களுடனும், தன் பங்குக்கு அரைசதம் விளாசிய கார்த்திக் 50 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைபற்றிய இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.