Breaking News
படுக்கையறையில் மெத்தை, தலையணையுடன் கன்று குட்டி கணவனாக நினைத்து வாழும் பெண்

கம்போடியாவை சேர்ந்த ஒரு பெண் புதிதாகப் பிறந்த பசுவின் கன்றை, இறந்துபோன தனது கணவராகவே நினைத்து வாழத் தொடங்கியிருக்கிறார். அண்டை வீட்டுக்காரர்களுக்கு இவரது செயல் மிகவும் வியப்புக்குரியதாகி இருக்கிறது. இதுபற்றி யாராவது கேட்டால், தனது கணவர் கனவில் தோன்றி, கன்றின் உடலுக்குள் தாம் புகுந்திருப்பதாகக் கூறியதாக தெரிவிக்கிறார் அந்த மூதாட்டி. இதனால் அவரது குழந்தைகளும், அண்டை வீட்டுக்காரர்களும் இதை நம்பத் தொடங்கிவிட்டனர். தொழுவத்தில் இருக்கவேண்டிய கன்று, இப்போது படுக்கையறையில் மெத்தை, தலையணையுடன் சொகுசாகத் தங்கியிருக்கிறது. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டிருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.