Breaking News
முட்டையில் ஊழல் : அதிமுக அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்த கமல்

பெரம்பலூரில் முட்டை ஊழலை தனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியதாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முட்டை ஊழலை எனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியது பெருமையே என்றும் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சட்டத்தை மீறாமல் ரசிகர்கள் நற்பணி இயக்க வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு பெரம்பலூரில் தரப்பட்டது அம்பலமாகியதை அவர் ட்வி்ட்டரில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசின் அனைத்து துறைகளில் ஊழல் பெருகி விட்டதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக அமைச்சர்கள் பலர், கமல்ஹாசனுக்கு எதிராக பல கருத்துகளை கூறினர். ஊழல் நடந்ததற்கான ஆதாரம் எங்கே என அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு தரப்பில் நடைபெற்ற ஊழலை கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு பதில் கூறும் விதமாக கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.