Breaking News
மெர்சல் படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளித்த விஜய்

தெறி படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மெர்சல் படத்தில் விஜய 3 வேடத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விஜய் எப்போது தன் படம் முடிவடையும் போது படக்குழுவினர்களுக்கு ஏதாவது பரிசு கொடுப்பது வழக்கம். அதே போல் மெர்சல் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தில் பணிபுரிந்த 200 பேருக்கு தங்க நாணயம் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மெர்ச்ல் திரைப்படம் திபாவளிக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.