Breaking News
பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர்- கயாமொகல்சராய் ரயில் தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின்
14 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன. விபத்து குறித்து தகவலறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
சேதமாகியுள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.  இந்த விபத்தால் அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.