Breaking News
‘சிலீப்பர் செல்லா’ செல்லூர் ராஜூ

சிறையில் இருந்த சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில் சசிகலா மீது விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்காக அமைச்சர் ராஜு புகழ் பாடியது ஆளுங்கட்சியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

”ஜெயலலிதாவின் ஆட்சி அமைய சிறப்பான முறையில் சசிகலா பாடுபட்டுள்ளார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த கருத்தை நான் மாற்றிக்கொள்ளவும் இல்லை,” என கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு திடீரென சசிகலா புகழ் பாடினார்.

‘தெர்மோகோல் சம்பவத்திற்கு பின் சிலநேரம் நகைப்பு, சில நேரம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தினமும் ஒரு கருத்தை கூறிவரும் இவர், தினகரன் கூறி வரும் ‘சிலீப்பர் செல்’ பட்டியலில் உள்ளவராக இருக்கலாம். அதை உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்தி விட்டார்’ என கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தினகரனின் ஆதரவாளரான ‘மாஜி’ நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ”இப்போதுதான் சிலீப்பர் செல் உறுப்பினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கின்றனர்,” என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.