Breaking News
‘கிங்பிஷர்’ மோசடி : விசாரணை தீவிரம்

கர்நாடகாவை சேர்ந்த மதுபானத் தொழிலதிபர், விஜய் மல்லையா. இவர், வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் துவங்கினார்; பின், அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.
இந்நிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகளை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள்
தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள், கடன் கொடுத்த வங்கிகளின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், கண்காணிப்பு வளையத்தில் சிக்கி உள்ளனர். அவர்களிடம், தீவிர விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.