Breaking News
காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

வடக்கு காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் ஹஜின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

ஹஜின் பகுதியில் 8 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். காலை 5 மணி முதல் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதாகவும், என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.