Breaking News
வெளிநாடு செல்ல கார்த்திக்கு அனுமதி? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

‘வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்ற, காங்கிரஸ் மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், இன்று(அக்.,11) விசாரிக்க உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., மோசடி வழக்கை தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் தேடப்படும் நபராக, அவர் அறிவிக்கப்பட்டார். அதனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் மகளை சேர்ப்பதற்காக, செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என, கார்த்தி சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, கார்த்திக்கு அனுமதி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக, எழுத்துப் பூர்வமாக பதிலை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு, கார்த்தியின் மனு மீது, இன்று முடிவெடுப்பதாக கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.