Breaking News
நிர்மலாவுக்கு சீனாவில் வரவேற்பு
சிக்கிம் எல்லையில், சீன ராணுவத்தினருடன், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கலந்துரையாடியதை, அந்நாட்டு பத்திரிகைகள் வரவேற்றுள்ளன.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன், சமீபத்தில், சிக்கிம் மாநிலத்தில், இந்திய – சீனா எல்லையில் உள்ள, நாதுலா கணவாய்க்கு சென்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினருடன் பேசினார். சீன எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, சீன ராணுவத்தினருடனும் நிர்மலா பேசினார். ‘நமஸ்தே’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும், அவர்களுக்கு விளக்கினார்.

இந்நிலையில், சீன ராணுவத்தினருடன், நிர்மலா சீதாராமன் பேசியதை, அந்நாட்டு பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. ‘இந்திய ராணுவ அமைச்சரின் செயல்பாடு, இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும். நிர்மலா சீதாராமனின் இந்த செயல்பாட்டை, இந்தியர்களும் வரவேற்பர்’ என, எழுதியுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.