Breaking News
மிகப் பெரிய நண்பரை இழந்தது இந்தியா: காஸ்ட்ரோ மறைவுக்கு மோடி இரங்கல்

மிகப் பெரிய நண்பர் ஒருவரை இழந்து இந்தியா துயரம் கொள்வதாக, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி, பிரதமர் மோடி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி:

“ஃபிடல் காஸ்ட்ரோ 20-ம் நூற்றாண்டின் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஆளுமைகளுள் ஒருவர். அவரது இழப்பால் ஒரு மிகப் பெரிய நண்பரை இழந்து இந்தியா துயரமடைந்துள்ளது.

கியூப அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தத் துயர்மிகு தருணத்தில் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

ஃபிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.