Breaking News
நார்த் இந்தியன் ஃபிஷ் கறி

என்னென்ன தேவை? 

வவ்வால் மீன் துண்டுகள் – 500 கிராம்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
தக்காளி – 2,
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – சிறிது.

அரைக்க…

மஞ்சள் கடுகு – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன்,
தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
முழு பூண்டு – 1,
காய்ந்தமிளகாய் – 8,
பிரிஞ்சி இலை – 1.

 

எப்படிச் செய்வது?

மீன் துண்டுகளை மஞ்சள் தூள், வினிகர் ஊற்றி நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் வைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். மீன் துண்டில் சிறிது மஞ்சள் தூள், உப்பு, 2 டேபிள்ஸ்பூன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்து பிரட்டிய மீன் துண்டுகளை போட்டு வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி, மீதியுள்ள அரைத்த மசாலா, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாசனை போனதும், பொரித்த மீன் துண்டுகளை சேர்க்கவும். மீன் மசாலாவுடன் நன்கு சேர்ந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து, சாதம், சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.