Breaking News
ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் காருடன் நுழைந்த நபரால் பரபரப்பு

இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி தொடரில் உத்தரபிரதேசம்– டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) டெல்லி பாலத்தில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே உத்தரபிரதேசம் 291 ரன்களும், டெல்லி 269 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் முன்னிலையுடன் 3–வது நாளான நேற்று 2–வது இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. அக்ஷ்தீப் நாத் 110 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். கேப்டன் சுரேஷ் ரெய்னா 16 ரன்னில் கேட்ச் ஆனார்.

முன்னதாக 3–வது நாள் ஆட்டம் முடிவடைவதற்கு 20 நிமிடங்கள் இருந்த போது அதாவது மாலை 4.40 மணி அளவில் மைதானத்திற்குள் திடீரென ஒரு கார் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்தவர் தன்னை கிரிஷ் ‌ஷர்மா என்று கூறிக்கொண்டு, பிரதான ஆடுகளத்தின் (பிட்ச்) மீது இரண்டு முறை வலம் வந்தார். காரை தடுத்து நிறுத்த வீரர்கள், நடுவர்கள் முயற்சித்த போதிலும் அந்த நபர் கண்டுகொள்ளவில்லை.

ஆடுகளத்தில் சிறிது நேரம் காரை நிறுத்திய அந்த நபர் பிறகு அங்கிருந்து வெளியேற முயற்சித்தார். அதற்குள் பாதுகாப்பு ஊழியர்கள் ஓடிவந்து பிடித்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.