Breaking News
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சென்னையில் நடக்கிறது

இந்து ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னையில் வருகிற 24–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளனர். 8 அணிகளும் மொத்தம் 60 சிறந்த வீரர்–வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளது. அணியில் 6 வகையான வயது பிரிவினர் இடம் பெறுவார்கள். சீனியர் வீரர்களில் பிரபாகரன் அதிகபட்சமாக ரூ.52,500–க்கு ஏலம் போய் இருக்கிறார். சீனியர் வீராங்கனைகளில் ரீத் ரிஷ்யா அதிகபட்சமாக ரூ.40,500–க்கு ஏலம் போனார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.