Breaking News
புளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையம் அந்நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 8 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற விமான நிலையத்திற்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் உயிருடன் பிடித்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

நன்றி் : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.