Breaking News
சீன ஓபன் பேட்மிண்டனில் இருந்து ஸ்ரீகாந்த் விலகல்

சீன ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நாளை மறுதினம் தொடங்கி 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நேற்று அறிவித்தார். தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற போது அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. இதற்கு ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதன் பேரிலேயே சீன ஓபனில் இருந்து பின்வாங்கியிருக்கிறார். உலக தரவரிசையில் 2–வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், அடுத்து ஹாங்காங் சூப்பர் சீரிசில் பங்கேற்க உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.