Breaking News
உலக ஹாக்கி லீக் இறுதி போட்டி: மூத்த நடுகள வீரர் சர்தார் சிங் நீக்கம்

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் அடுத்த மாதம் உலக ஹாக்கி லீக் இறுதி போட்டி நடைபெறுகிறது.  இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அந்த அணியின் விவரம்:-

கோல்கீப்பர்கள்:  ஆகாஷ் அனில் சிக்தே, சுராஜ் கர்கேரா.

தடுப்பு ஆட்டக்காரர்கள்:  ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், டிப்சன் டிர்க்கி, வருண் குமார், ருபீந்தர்பால் சிங், பிரேந்திரா லக்ரா.

நடுகள வீரர்கள்:  மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), எஸ்.கே. உத்தப்பா, சுமீத், கோத்தஜித் சிங்.

முன்கள வீரர்கள்:  எஸ்.வி. சுனில், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

அணியில் இருந்து சர்தார் சிங் நீக்கப்பட்டு உள்ளார்.  நல்ல உடற்திறனில் உள்ள ருபீந்தர்பால் சிங் மற்றும் பிரேந்திரா லக்ரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வருடத்திற்கான கேல் ரத்னா விருது பெற்ற மற்றும் முன்னாள் கேப்டனான சர்தார் கடந்த மாதம் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றவர்.  இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

ருபீந்தர் மற்றும் லக்ராவின் வருகை பலவீன நிலையிலுள்ள தடுப்பு ஆட்ட வீரர்கள் வரிசைக்கு அதிக ஊக்கம் அளிக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.