Breaking News
‘மோடியின் தோலை உரிப்பேன்’: லாலு மூத்த மகன் ஆவேசம்

”என் தந்தைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தோலை உரிப்பேன்,” என, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் எச்சரித்து உள்ளார்.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவிற்கு அளிக்கப்பட்டு வந்த, ‘இசட் பிளஸ்’ உயர் பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அவரது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.

யார் பொறுப்பு

இது தொடர்பாக, பாட்னாவில் நேற்று, லாலுவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், நிருபர்களிடம் கூறியதாவது: என் தந்தையை கொலை செய்வதற்காக, மேற்கொள்ளப்படும் சதி வேலை இது. இதற்காக, மத்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுப்போம். பிரதமர் மோடியின் தோலை உரிப்போம். இதை, அவரிடம் போய் சொல்லுங்கள். என் தந்தை உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால், யார் பொறுப்பேற்பர்? அவர் கொல்லப்பட்டால், யார் பொறுப்பேற்பது? என் தந்தையின் உயிர் முக்கியம் இல்லையா? இவ்வாறு அவர் கூறினார்.

கவுரவம்

லாலுவுக்கு, ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட போதும், அவரை பாதுகாக்கும் பணியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 30 வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், இசட் பிளஸ் பாதுகாப்பு, அரசியல்வாதிகளுக்கு கவுரவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.