Breaking News
ஆர்.கே.நகர் அ.தி.மு.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது, இன்று(நவ.,30) தெரிய வரும். வேட்பாளரை இறுதி செய்வதற்காக, கட்சியின் ஆட்சி மன்றக் குழு, சென்னையில் இன்று கூடுகிறது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பன்னீர் அணி சார்பில், கட்சியின் அவைத் தலைவர், மதுசூதனன் களம் இறங்க விரும்புகிறார்; அதை, பன்னீர் ஆதரவாளர்களும் ஆதரிக்கின்றனர். ஆனால், பழனிசாமி தரப்பில், ‘சீட்’ கேட்டு, பலர் நெருக்கடி கொடுக்கின்றனர். இதன் காரணமாக, முதன்முறையாக இடைத்தேர்தலுக்கு, கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு வாங்கப்பட்டது. போட்டியிட விருப்பம் தெரிவித்து, மொத்தம், 28 பேர் மனு கொடுத்தனர். மதுசூதனனுக்கு எதிராக, சில அமைச்சர்களே, தங்கள் ஆதரவாளர்களை, விருப்ப மனு கொடுக்க வைத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை, அதிமுக கட்சி அலுவலகத்தில், ஆட்சிமன்றக் குழு கூடி, வேட்பாளரை முடிவு செய்ய உள்ளது. ஆட்சிமன்றக் குழு கூட்டம் முடிந்ததும், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பதை அறிய, அ.தி.மு.க., தொண்டர்கள் ஆவலாக உள்ளனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.