Breaking News
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி அபராதம்

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் வி‌ஷயத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் முற்றுரிமையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து இந்திய போட்டிகள் ஆணையம் விசாரணை நடத்தியது.

அதில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் உரிமத்துக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாதார நலனை காக்கும் நோக்கத்துடன் விதிமுறைக்கு மாறாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திய போட்டிகள் ஆணையம், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடியே 24 லட்சத்தை அபாரதமாக நேற்று விதித்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.