Breaking News
அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறுவேன் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டான்கோவில் கிராமத்தில் வீரமணவாளசாமி கோவில் உள்ளது. இக்கோவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் குலதெய்வ கோவிலாகும்.

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற பிறகு தினகரன் நேற்று தனது மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிசினி ஆகியோருடன் தட்டான்கோவிலுக்கு வந்து குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர், அதே பகுதியில் மருதூர் கிராமத்தில் உள்ள சிவபிரகாசசுவாமிகள் ஜீவ சமாதிக்கு சென்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகத்தான் ஆர்.கே. நகர் மக்கள் எனக்கு வெற்றியை அளித்தனர். தேர்தலுக்கு பிறகு தினகரன் காணாமல் போய்விடுவார் என பலரும் கூறினர். அவர்களின் கனவு பொய்யாகிவிட்டது.

சட்டசபையில் நான் என்ன பேசப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நாளை (புதன்கிழமை) ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளேன். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் காரணமாக 3 மாதங்களுக்கு பிறகு அரசியலில் தினகரன் நீடிப்பாரா? என சிலர் பேசி வருகிறார்கள். என் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் மூலமாக சந்தித்து வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.