Breaking News
தினகரன் நன்றி அறிவிப்பு; ரூ. 10 ஆயிரம் கிடைக்குமா?

நன்றி தெரிவிக்க தினகரன் வருவதால், 20 ரூபாய் டோக்கனுக்கு பணம் கிடைக்கும் என, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இவர், முறைப்படி, டிச., 29ல், எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, இன்று மாலை தொகுதிக்கு செல்கிறார். புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் பகுதியில் இருந்து, திறந்த வேனில் சென்று நன்றி தெரிவிக்கிறார்.

தினகரன் தரப்பினர், கடைசி நேரத்தில், ஓட்டுக்கு, 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, வெற்றி பெற்றதும், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக, உறுதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 20 ரூபாய் பெற்ற மக்கள், எப்போது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தினகரன், இன்று நன்றி தெரிவிக்க வருவதால், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில், தொகுதி மக்கள் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.