Breaking News
மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் மாஜி முதல்வர்

மறு மணம் செய்யவிருப்பதால் மனைவியிடமிருந்து விவகாரத்து தர கோரி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுகட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா ( 47) வுக்கும், பாயல் அப்துல்லாவிற்கும் கடந்த 1994ம்ஆண்டு திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் பாயலிடமிருந்து விவகாரத்து கோரி கீழ் கோர்ட்டில் ஒமர் அப்துல்லா தாக்கல் செயத மனு 2016-ல் தள்ளுபடியானது. டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இதில் தாம் மறு மணம் செய்யபிருப்பதால்
முன்கூட்டியே விவகரத்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தீபா ஷர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. உரிய பதில் அளிக்க வேண்டும் என பாயல் அப்துல்லாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.