Breaking News
நிரவ் மோடி உருவ பொம்மை எரித்து ஹோலி கொண்டாட்டம்

மும்பை, வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய, வைர வியாபாரி, நிரவ் மோடியின், 58 அடி உருவப் பொம்மையை எரித்து, மும்பை மக்கள், ஹோலி பண்டிகை
கொண்டாடினர்.
வைர வியாபாரி, நிரவ் மோடி, மும்பையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இதனால்,
நிரவ் மோடி மீது, நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். மும்பையில் நேற்று நடந்த, ஹோலி கொண்டாட்டத்தில், மக்களின் கோபம் எதிரொலித்தது.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள், தீயவைகளை எரிக்கும் விதமாக, மரக்கட்டைகளை எரிப்பது வழக்கம். மும்பையின், வொர்லி பகுதியில், ஆண்டுதோறும், சமூக பிரச்னைகளை மையப்படுத்தி, ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நிரவ் மோடியின், 58 அடி உருவ பொம்மையை செய்து, அதை எரித்து ஹோலியை கொண்டாடினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.