Breaking News
திருமலையில் ஒரே நாளில் 2,000 திருமணங்கள்

திருமலையில், நேற்று ஒரே நாளில் மட்டும், 2,000 திருமணங்கள் நடந்தன.
ஆந்திராவில் உள்ள, திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில், திருமணம் நடத்த, மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களும், நடிகர், நடிகையரும், திருமலையில் திருமணம் செய்ய, ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், தேவஸ்தான நிர்வாகம், திருமணம் நடத்துவதற்கான, பிரமாண்ட கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மண்டபத்தில், ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்துவதற்கான வசதி உள்ளது. திருமணம் செய்ய விரும்புவோர், தேவஸ்தான இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இதுதவிர, திருமலையில் உள்ள பல தனியார் மண்டபங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன. இலவச திருமணங்கள் முதல், 15 லட்சம் ரூபாய் செலவிலான திருமணங்கள் வரை, தினமும் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், நேற்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, ஒரே நாளில், 2,000 திருமணங்கள் திருமலையில் நடந்தன. அதனால், திருமலை முழுவதும் நேற்று, புதுமணத் தம்பதியராக காணப்பட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.