Breaking News
கதுவா சிறுமி கொலை வழக்கு: பதான்கோட் கோர்ட்டில், கைதான 7 பேர் ஆஜர்

கதுவா கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அப்போது பல்வேறு இடையூறு ஏற்பட்டதால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சிறுமியின் தந்தை மனு செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.அதன்படி சிறுமி கொலை வழக்கு பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நேற்று பதான்கோட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக கைதான 8 பேரில் 7 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதானவர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் அழைத்து வரப்படவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகையை உருது மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வரும் 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு விசாரணை காரணமாக கோர்ட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.