Breaking News
எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் -ரஜினிகாந்த் கோபம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் பிரச்சினை உருவானதே சமூக விரோதிகள் போலீசாரை அடித்த பிறகுதான். சமூக விரோதிகள் போலீசாரை அடித்துள்ளனர். சமூக விரோதிகள் யார் என அடையாளம் காண வேண்டும்.போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போய்க்கொண்டு இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என கூறினார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.