Breaking News
இன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி

ற்கு தப்பியோடிய நிரவ் மோடி, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீசில் சிக்காமல் பல நாடுகளுக்கு சென்ற தகவல் கிடைத்துள்ளன.

நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்று, சி.பி.ஐ., செய்தித் தொடர்பாளர், அபிஷேக் தயாள், நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல், மத்திய அரசால், இன்டர்போல் மத்திய தகவல் தொகுப்புக்கு, கடந்த, பிப்., 24ல் தெரிவிக்கப்பட்டது. நிரவ் மோடியை பிடித்து ஒப்படைப்பது தொடர்பாக, சி.பி.ஐ., விடுத்த கோரிக்கையை ஏற்று, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீஸ், தேடுதல் நோட்டீசை வெளியிட்டது.

அதில், நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவல் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, நிரவ் மோடி செல்லக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஆறு நாடுகளுக்கு, சி.பி.ஐ., வேண்டுகோள் கடிதங்களை அனுப்பி வைத்தது. நிரவ் மோடி பற்றிய தகவல், அவரது நடமாட்டம் குறித்து தெரிவிக்கும்படி, அந்த நாடுகளை, சி.பி.ஐ., கேட்டுக் கொண்டிருந்தது.

இத்தகைய கடிதங்கள், அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.இத்தனை நடவடிக்கைகளையும், சோதனைகளையும் மீறி, நிரவ் மோடி, பல நாடுகளுக்கு சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.