Breaking News
அதிக செல்வாக்குமிக்கவர் பட்டியலில் 3 இந்திய பெண்கள்

தொழில்துறையில் உலக அளவில் 40 வயதிற்கு உட்பட்ட, அதிக செல்வாக்கு மிகுந்தவர்கள் மற்றும் முன்னுதாரணமாக விளங்கும் 40 பேரின் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், 3 பெண்கள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்காவின் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திவ்யா சூர்யதேவரா 4வது இடத்திலும், விமியோ நிறுவன சிஇஓ அஞ்சலி சுத் 14 வது இடத்திலும், ராபின்ஹூட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை சிஇஓ.,வுமான பாய்ஜூ பட் 24 வது இடத்திலும், பிமைள் பவுண்டர்ஸ் பண்ட் நிறுவனத்தின் நிறுவன கூட்டாளியுமான அனு துக்கல் 32 வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தை இன்ஸ்டாகிராம் இணை நிறுவனரும், சிஇஓ.,வும் ஆன கெவின் சிஸ்டிரோம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்குமே வயது 34.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.