Breaking News
உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய அணி வெற்றி

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தனிநபர் போட்டி நிறைவடைந்த நிலையில் அணிகளுக்கான பந்தயம் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 24 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘இ’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது. இந்திய அணியில் ராகுல் பாய்தா, உத்கார்ஷ் பஹெதி, வீர் சோட்ரானி ஆகியோர் வெற்றியை தேடித்தந்தனர். தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் பதம் பார்த்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது. இதே போல் பலம் வாய்ந்த அணியான எகிப்து அணி சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை தலா 3-0 என்ற கணக்கில் பந்தாடி அடுத்த சுற்றை எட்டியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.