Breaking News
ஓபிஎஸ் மீது சொத்து குவிப்பு புகார்: விசாரணைக்கு உத்தரவு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள சொத்து குவிப்பு புகாரை, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியுள்ளது.

வழக்கு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பதில் மனு

வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஓ.பி.எஸ்., மீதான புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை ஏற்று கொண்ட கோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.