Breaking News
உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தேர்வில் முறைகேடு; 46 பேர் கைது

39 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,760 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் உதவி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில் உதவி ஆசிரியர் பணிக்கான தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அலகாபாத் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 5 தேர்வர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மேலும் பலருக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 46 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.