Breaking News
ஸ்ரீரெட்டி உனக்கு அவ்ளோ திமிரா? கொதிக்கும் இயக்குனர்

ஸ்ரீரெட்டி தனது எல்லைகளை தாண்டி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார் என இயக்குனர் வாராகி கூறியிருக்கிறார்.
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

ஆனால், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப்போகிறேன்.. அதற்கு நீ தகுதியானவன்தான்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை வாராகி மிரட்டுவதாக ஸ்ரீரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.