Breaking News
நிவாரண பொருட்களை ரெயில்களில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி – ரெயில்வே மந்திரி தகவல்

கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பரிதவித்த 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளிப்பதுடன், ஏராளமான நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகின்றன.

இந்தநிலையில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவில், “எனது அமைச்சகம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய உறுதி கொண்டுள்ளது. பல்வேறு மாநில அரசு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் இதர முகமைகள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், புனே மற்றும் குஜராத்தின் ரத்லாம் நகரங்களில் இருந்து டேங்கர்களில் குடிநீர் ஏற்றிய 2 ரெயில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.