Breaking News
ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஜனனி! கடைசி வரை போராடிய யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் ஃபைனலுக்கு செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேரடி ஃபைனல் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் கவனத்துடன் நேற்றைய டாஸ்க்கில் விளையாடினர்.

ஒவ்வொரு போட்டியாளரின் கையில் கொடுக்கப்பட்டிருந்த கண்ணாடி கோப்பையின் தண்ணீர் கொட்டாமல் அனைவரும் விளையாடினாலும் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே கடும் போட்டி இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதிலும் இறுதியில் ஜனனி வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார்

இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் ஜனனியை அடுத்து இன்னும் மூன்று போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இனிவரும் வாரங்களில் ஐஸ்வர்யா, பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் வெளியேறினால் ஃபைனலுக்கு ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் யாஷிகா தகுதி பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.