Breaking News
ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி நோக்கி பயணித்த நிலையில், கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ சிடோன்சா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூரு அணியில் நிஷூ குமாரும் (45-வது நிமிடம்), சுனில் சேத்ரியும் (88-வது நிமிடம்) கோல் போட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.