தகவல் தொழில்நுட்ப தலைநகராக சென்னை விளங்குகிறது : முதலமைச்சர்
_*தகவல் தொழில்நுட்ப தலைநகராக சென்னை விளங்குகிறது : முதலமைச்சர்*_
*இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று கூறும் அளவிக்கு சென்னை விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தகவல் தொழில்நுட்ப மாநாடு நிறைவு நிகழ்சசியில் பங்கேற்ற அவர், வேலைவாய்ப்பை பெறும் வகையில், பொறியியல் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.*
*2023 என்ற தொலைநோக்கு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், ஜனவரி மாதம் நடைபெறும், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு, அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஆற்று மணலுக்கு மாற்றாக வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய முதல் கப்பல், சென்னைக்கு வந்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறினார். தமிழகத்தில் 50 இடங்களில் விரைவில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்*