Breaking News
முதல்வரின் நிர்வாக அணுகுமுறை அனைவாராலும் பாராட்டப்படுகிறது.அதிமுக அமைப்பு செயலர் பொன்னையன் கூறினார்

சென்னை: அதிமுக அமைப்பு செயலர் பொன்னையன் கூறியதாவது: முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என நான் கூறவில்லை. மேல்முறையீடு செய்யும் என்பதற்கும், செய்யலாம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
முதல்வரின் நிர்வாக அணுகுமுறை அனைவாராலும் பாராட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதில், எவ்வித முறைகேடும் நடக்காது. ஆன்லைன் டெண்டரை திறக்கும்போதுதான் யார் டெண்டர் கோரியுள்ளனர் என்பது தெரியும். உலக வங்கி விதிப்படி தான் ஆன்லைன் முறை. அதிமுக ஆட்சியில் தான், டெண்டரில் ஆர்டிஜிஎஸ் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆர்டிஜிஎஸ் முறையில் டெண்டரில் குறிப்பிடப்படும் தொகையை முன்கூட்டியே அறிவது இயலாத காரியம். லஞ்ச ஒழிப்பு துறை அதிமுகவிற்கோ, முதல்வருக்கோ கட்டுப்பட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.