Breaking News
திருப்பூரில் விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு திமுக ஆதரவளிக்கும்: ஸ்டாலின்

திருப்பூரில் விவசாயிகள் நடத்த உள்ள கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலையாறு, நல்லாறு பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், நீராறில் இருந்து கேரளத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தக் கோரியும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட விவசாயிகள் திருப்பூரில் அக்டோபர் 15 அன்று பேரணி நடத்த உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் பேரணிக்குத் திமுக ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் பேரணியில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்கள் அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.