Breaking News
பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு -ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தின் தாதியா என்னுமிடத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியதாவது:-

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி ஒரேஒரு முறை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளேன். தொழிலதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வது போல் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யலாம் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், அது பற்றிப் பிரதமர் ஒரு சொல்கூடப் பேசவில்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
பெண் குழந்தைகளைக் காப்போம் எனப் பெயரளவுக்கு முழங்கும் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சட்டமன்ற உறுப்பினரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் பிரதமர் மனத்தில் இடமில்லை என்றும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு. தொழிலதிபர்களை சகோதரர்கள் என அழைக்கும் பிரதமர், உழவர்களையும் தொழிலாளர்களையும் சகோதரர்கள் என அழைப்பதில்லை என்றும் ராகுல்காந்தி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.