Breaking News
கொல்கத்தாவில் ரசாயனத்தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள டங்கரா பகுதியில் ரசாயனப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அங்கு இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயனப்பொருட்கள் என்பதால் மோசமான நெடியுடன் தீ குபு குபுவென பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.