Breaking News
தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை – பிசிசிஐ

தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்கள் மனைவியர், தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது என்பது பிசிசிஐ நிலையாக உள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்போது, மனைவியர் மற்றும் தோழிகள் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்பட உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் சப்போர்ட் சிஸ்டம் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்களால் ஒருபோதும் ஆட்டம் பாதிக்காது என்பதை வலியுறுத்தியிருந்தார்.

விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள் தங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது

ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கான நிர்வாகிகள் குழு (CoA) இதனை மறுத்து உள்ளது.

நிர்வாக குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி. கூறும் போது இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்த கருத்து கேட்கபடுகிறது . இது குறித்து முடிவு எடுக்க இன்னும் சிறிது நேரம் ஆகலாம். தற்போது வெளியான செய்திகள் தவறானது என கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.