Breaking News
ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாவிட்டால் கூட ஆஸ்திரேலியத் தொடர் நிச்சயம் சவாலானதாகவே இருக்கும்.
ஏனென்றால், நாம் நாட்டைவிட்டு வெளிநாட்டில் விளையாடுகிறோம். எனவே காலச்சூழல் வேறுவேறாக இருக்கும். எந்தச் சூழலுக்கும் உடனடியாக மாறிப் பந்துவீசுவது என்பது பந்துவீச்சாளர்களுக்கு எளிதானது அல்ல. ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பலமுறை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலய வீரர்களுக்கு உள்நாட்டு மைதானம் என்பதால், அவர்களுக்குக் காலநிலையும், சூழலும் எளிதாக இருக்கும். ஆனால், நம்மைப் பொருத்தவரை ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும்கூட ஆஸ்திரேலியத் தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது.

நீண்டதொடர்களில் விளையாடிவிட்டு வரும் போது, ஓய்வு என்பது அவசியமாகும். மனதீரியாக நாம் சோர்வடைந்துவிடுவோம். போதுமான ஓய்வு அளிக்கும் போது, அடுத்த போட்டித்தொடருக்கு தயாராக உதவியாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.