Breaking News
டெல்லியில் காவலர் நினைவு சின்னம்; பிரதமர் மோடி திறப்பு

நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் காவலர் நினைவு சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தினை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

கடந்த 1959ம் ஆண்டில் லடாக்கில் சீனாவுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த 10 காவலர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
அவர்களுக்கான நினைவு சின்னத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.