Breaking News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். நவம்பர் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இதேபோன்று ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6ந்தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.