Breaking News
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.ஒவ்வாரு ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி முக்கியஸ்தர்கள் பங்கேற்பேர். இந்தாண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிபர் டிரம்ப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசியது,
“இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல லட்சம் கடின உழைப்பாளிகளுக்கு தாயகம் அமெரிக்கா” என்றார்.தொடர்ந்து டுவிட்டரில் டிரம்ப் கூறியது, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இங்கே கூடி உள்ளோம். இந்து மக்களின் தீபங்களின் விழாவான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு மிகுந்த கவுரவம். என குறிப்பிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.