Breaking News
தேர்தல் வரும் பின்னே பணம் பட்டுவாடா நடக்கும் முன்னே

18 எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார் இதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பூந்தமல்லி தனி தொகுதியில் அதிமுக அனைவரும் பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சடையப்பா திருமண மண்டபத்தில் கூடுமாறு அழைக்கப்பட்டனர் மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏவான சிறுணீயம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் கிளை செயலாளர்கள் அனைத்து அணி பிரமுகர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பலராமன் அனைத்து பிரமுகர்களுக்கும் பணத்தை வாரி வழங்கி அசத்தினார் பிரமுகர்கள் அனைவரும் பூந்தமல்லி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக நிச்சயம் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பலராமன் எம்எல்ஏ பேசும்போது தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தண்ணீர் குளம் ஏழுமலை சீரழித்துவிட்டார் நாம் எப்பாடுபட்டாவது 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை என்னிடத்தில் தெரிவியுங்கள் நான் சீரமைத்து தருகிறேன் திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க போவதாக பேசினார் நிகழ்ச்சியில் திபா கண்ணன் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு கே ரவிச்சந்திரன் என் எஸ் ஏ மணிமாறன் ஜாவித் அகமது பூவை மு ஞானம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.