Breaking News
நாமக்கல்லில் பரமத்தி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதல்; 2 பேர் பலி

நாமக்கல்லில் பரமத்தி அருகே மறவம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியே மினி லாரி ஒன்று வேகமுடன் வந்தது. அது லாரி மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் மினி லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.