Breaking News
கன்னியாஸ்திரிகள் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள்: தடுத்துநிறுத்த போப்பாண்டவர் வேண்டுகோள்

முதல் முறையாக அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, போப் பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாகச் சென்றார். அவருக்கு அபுதாபி நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று ஷேக் சாயித் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று, பிரார்த்தனை நடத்தினார்.

இதில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, தனி விமானத்தில் வாடிகனுக்கு போப் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பாதிரியார்களால், கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.