Breaking News
காஷ்மீரில் கொடூர தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில்: மூளை சலவைச் செய்தை ஜெய்ஷ் -இ- முகமது

காஷ்மீரைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை மூளைச் சலவை செய்து மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பு நடத்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 45 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமது என தெரிய வந்துள்ளது.

இந்த இயக்கத்தை தொடங்கியது சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் ஆசார். பாகிஸ்தான் ஆதரவுடன் தொடங்கப்பட்ட ஜெய்ஷ் -இ- முகமது தொடர்ந்து இந்தியாவில் நாசவேலைகளி் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து கொண்டு ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தாக்குல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக வறுமையில், விரக்தியில் இருக்கும் காஷ்மீர் இளைஞர்களை குறி வைத்து தங்கள் இயக்கத்தில் சேர்த்து மூளைச்சலவை செய்து வருகிறது. 2017 -ம் ஆண்டு டிசம்பரில் பர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பு அவரை மூளைச் சலவை செய்து தற்கொலைப்படை தீவிரவாதியாக மாற்றியது பின்னர் தெரிய வந்தது.

புல்வாமா தாக்குதலிலும் இதே போன்றே நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதியின் பெயர் ஆதில் அகமது தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இவர் கடந்த ஆண்டு சேர்ந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இவர் காகபோராவைச் சேர்ந்தவர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் காகபோரா உள்ளது.

சிஆர்பிஎப் பேருந்தின் மீது 350 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய ஸ்கார்பியோ காரை மோதி தாக்குதல் நடத்திய ஆதில் அதில் தானும் உயிரிழந்துள்ளார். அதிலின் தந்தை ரியாஸ் அகமது, சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார். பிளஸ் டூ வரை படித்த அடில், தொடர்ந்து படிக்கவில்லை. இவரது உறவினர் ஒருவர் தீவிரவாதியாக இருந்தநிலையில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என துடித்த ஆதிலை ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பினர் தொடர்பு கொண்டு மூளைச் சலவை செய்துள்ளனர். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனார். ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பில் சேர்ந்து ஆயுத பயிற்சிப் பெற்றுள்ளார்.

அவர்கள் தற்கொலை படை தாக்குதலுக்கு அடிலை தயார் படுத்தியுள்ளனர். ஆதில் மூலம் இந்த தாக்குதலை ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பினர் தற்போது அரங்கேற்றியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலான இது நடந்த முடிந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.